- °C
Are You a business owner?
List Your Business / AD<p>திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரு வீடு முழுமையாக மண்ணில் புதைந்துள்ள நிலையில் அந்த வீட்டில் இருந்த 7 பேரின் நிலை என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. மீட்புப் பணிக்காக 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன<br /> <br /> தொடர் கனமழையின் காரணமாக, திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை மண் அரிப்பு காரணமாக திருவண்ணாமலை மலையில் இருந்து ராட்சதப் பாறை ஒன்று சரிந்திருக்கிறது. இதனால், பெரும் மண் குவியல் மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் மக்களின் வீடுகளின் மீது சரிந்திருக்கிறது.</p> <p>35 டன் எடை கொண்ட ராட்சதப் பாறை, சுமார் 20 அடி சரிந்து, வீடுகளை மூடியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. மேலும், 2 வீடுகளும் மண் சரிவுக்குள் சிக்கியுள்ளன. அந்த 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் மண்ணில் புதையாமல் தப்பியுள்ளனர்.<br /> ஆனால், முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்த ராஜ்குமாரின் வீட்டில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் நிலை என்ன? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது பிள்ளைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.</p> <p> </p> <p>தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக அவர்கள் வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டுக்குள் இருந்துள்ளனர். அங்கு கவுதம், இனியா என 2 சிறார்கள் இருப்பதால், பக்கத்து வீடுகளைச் சேர்ந்த தேவிகா, வினோதினி உள்ளிட்ட 3 பேர் அங்கு விளையாடுவதற்காக வந்துள்ளனர். இந்தச் சூழலில் தான் ராட்சதப் பாறை சரிந்து, கடுமையான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்ட பிறகு ராஜ்குமார் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.</p> <p>இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து சென்று பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்.பி சுதாகர் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைவாகச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.</p> <p>ஆனால், மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்கு மேல் பகுதியில் மிகப்பெரிய ராட்சத பாறை சரியும் நிலையில் அபாயகரமான வகையில் இருந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. மண்ணை அப்புறப்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபடும்போது, ராட்சத பாறை சரிந்து விழக்கூடும் என்பதால் அந்தப் பகுதியில் வசித்து வந்த அனைவருமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p> <p>இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு (NDRF) தகவல் கொடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் இருந்து துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நள்ளிரவில் திருவண்ணாமலை வந்தடைந்தனர். மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்குள் ஆட்கள் இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க மோப்ப நாயைப் பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அதற்காக, மோப்ப நாய்கள் ரூபி, மிர்ஸி ஆகியவையும் வரவழைக்கப்பட்டன.</p> <p>மேலும், அரக்கோணத்தில் இருந்தும் ஹைட்ராலிக் ஏர் லிஃப்டிங் பேக் உள்ளிட்ட மீட்புப் பணிக்கான சில உபகரணங்களையும் வரவழைத்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும், அந்த வீடு அமைந்துள்ள பாதை குறுகலாக இருப்பதால் ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வர முடியாத சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.</p> <p>இரவில் மழை தொடர்ந்து வந்ததாலும், மேலும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததாலும் மீட்பு பணி தொடங்கவில்லை. இந்நிலையில் இன்று விடியற்காலையில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீயணைப்புப் படையினர் மீட்பு பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p> <p> </p> <p><a href="https://tiruvannamalaiads.com/">https://tiruvannamalaiads.com/</a><br /> <a href="https://www.facebook.com/tiruvannamalaiads/">Facebook</a></p>
BackCopyrights © 2025 Quickix.com. All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Quickix advertising Private Limited. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.