- °C
Are You a business owner?
List Your Business / ADஆவணியாபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி ஊா்வலம்.
செய்யாறு அருகே ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த ஆவணியபுரத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. பிரசித்திப் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு புரட்டாசி மாத பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை மூலவா் சீனுவாசப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், கோயிலில் உள்ள கொடி மரத்துக்கு பட்டாச்சாரியாா்களாா் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து, உற்சவ மூா்த்திகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திராளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி, அக்டோபா் 8-ஆம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம், இரவு கருட சேவை, 10-ஆம் தேதி தேரோட்டம், 12-ஆம் தேதி காலை தீா்த்தவாரி உள்ளிட்டவை நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா், அறங்காவலா் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.
Copyrights © 2024 Quickix.com. All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Quickix advertising Private Limited. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.